"நாளை சுவாசிக்க காற்று வேண்டுமெனில் இன்றே மரம் நடுவீர்''- ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வில் ஈடுபட்ட செல்வகுமார்

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களிடையே மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தனி மனிதராக காங்கேயத்தைச் சேர்ந்த செல்வகுமார் (36) என்பவர், உடல் முழுவதும் மரக்கன்றுகளை சுமந்து வந்து மரம் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வில் ஈடுபட்டார்.



இதுகுறித்து செல்வகுமார் கூறுகையில், திரும்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில் வசித்து வருகிறேன். திருப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 7 வருடங்களாக மரம் வளர்ப்பு குறித்து தனி மனிதனாக மக்களிடைய விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். 

இதற்காக பிரத்யேகமாக ஆடை தைத்து அதில் 70 மரக் கன்றுகளை வைத்துள்ளேன். இது அனைத்தும் சேர்த்து 100 முதல் 120 கிலோ எடை வரை இந்த ஆடை இருக்கும். இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களைக் கடந்துள்ளதை குறிக்கும் வகையில் இந்த 70 மரக்கன்றுகள் வைத்துள்ளேன்.

மழை இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போனதற்குக் காரணம் மரங்களை வெட்டியதே. தற்போது மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. மீண்டும் மரக்கன்றுகளை நடவுசெய்தால் மட்டுமே மழை பெய்யும். 

தமிழ்நாடு முழுவதும், அரசு விடுமுறை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன். மேலும், இலவசமாக மரக்கன்றுகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறேன். 

நம் எதிர்கால சந்ததியினர் சுவாசிக்க நாம் தற்போதே மரம் நட வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக துணியால் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்துமாறும் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்டு 32 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

அழிந்து வரும் பனைமரங்களை காப்பாற்ற ஆறு, குளம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று பனைமர விதைகளை நடவு செய்து வருகிறேன். விவசாயிகளுக்கும் சொந்த செலவில் பனை விதை வாங்கி விநியோகித்து வருகிறேன்.

மழை பெய்ய கோவில்களில் சிறப்புப் பூஜைகளையும், யாகங்களையும் நடத்துவதைத் தவிர்த்து மரம் நட அரசும், மக்களும் முன்வர வேண்டும். இவ்வாறு செல்வகுமார் கூறினார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...