கோவையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபாட்டில்களை உடைத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

கோவை கணபதிபுதூர் அடுத்துள்ள சங்கனூர் சாலையில் மதுக்கடை செயல்பட்டு வந்தது. சத்தியமங்கலம் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்ததையடத்து நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டது. ஆனாலும் கள்ளத்தனமாக மதுவை பதுக்கிவைத்து அங்கு 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக சரவணம்பட்டி போலீஸாரிடம் அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஏற்கனவே பல முறை புகார்கள் அளித்திருந்தனர். ஆனாலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.



இந்நிலையில், மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையில் நேற்று (மே 20) கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வந்ததை அறிந்து அங்கு சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை சாலையில் வீசி எறிந்தனர். இதனிடையே, மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓடியதை அடுத்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து மதுபாட்டில்களையும் வாலிபர் சங்கத்தினர் உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதது.

இதேபோல், கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஆஞ்சநேயர் காலனி பகுதியில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், அப்பகுதி மக்களும் ஒன்றிணைந்து மதுக்கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை மறித்த போலீஸார் 15 நாட்களுக்குள் மதுக்கடை அகற்றப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...