கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இதில் மாநகரப் பகுதிகளில் 750 சிலைகளும், புறநகர்ப் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட சிலைகளும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தன. 3-வது நாள் மற்றும் 5-வது நாள் சிறப்பு தரிசன வழிபாடுகளுக்குப் பிறகு, பெரும்பாலான சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன.

கோவை மாநகர் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாநகரப் பகுதிகளில் இருந்து இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டன.



விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இதில் கோவை மாநகரப் பகுதிகளில் மட்டும் 750 விநாயகர் சிலைகளும், புறநகர்ப் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தன.



3-வது நாள் மற்றும் 5-வது நாள் சிறப்புத் தரிசன வழிபாடுகளுக்குப் பிறகு, பெரும்பாலான சிலைகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இன்று கோவை மாநகர்ப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்திருக்கும் முத்தண்ணன் குளத்திற்கு வரிசையாகக் கொண்டு வரப்பட்டன.



மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் ஆடல் பாடலுடன் ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைகளைக் குளத்தில் கரைத்து வழிபட்டனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கக் காவல் துறை சார்பில் ஆர்.எஸ்.புரம் மற்றும் முத்தண்ணன் குளத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...