கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், ஒரு பெண் உட்பட வழக்கறிஞர்கள் என இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. பந்தய சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர் ஒருவரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கிய விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் உட்பட இரு தரப்பினரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர் ஒருவரின் காரின் நான்கு டயர்களிலும் காற்று இறக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த வழக்கறிஞர் விசாரித்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவரும் பெண் ஒருவரும் தாங்கள்தான் காரின் டயர்களில் காற்றை இறக்கியதாக கூறியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



இதையடுத்து, அந்த வழக்கறிஞர் கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சங்க செயலாளர் சுதீஷ், காரின் டயர்களில் காற்றை இறக்கியதாக கூறப்பட்ட இளைஞர் மற்றும் பெண்ணிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை அந்தப் பெண் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த வழக்கறிஞர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்தப் பெண்ணும் அவருடன் இருந்த இளைஞரும் வழக்கறிஞர் ஒருவரை தள்ளிவிட்டதாக கூறப்படுவதால், இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சுதீஷ் அளித்த தகவலின் பேரில், பந்தய சாலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதுடன், சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சம்பவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...