திருப்பூரில் பெண்ணை தாக்கிய டி.எஸ்.பி. மீது எந்த புகாரும் வரவில்லை- தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் ரேகா ஷர்மா பேட்டி



தேசிய மகளிர் ஆணையத்தின் 'மகிளா ஜென் சுன்வைவ்' அமைப்பு நாடு முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த அமைப்பு நடத்தும் விசாரணை இரண்டு நாட்கள் கோவையில் நடைபெறுகிறது. இதற்காக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் ரேகா ஷர்மா கோவை வந்தார். அப்போது, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 5 மாதங்களாக 'மகிளா ஜன் சுன்வைவ்' அமைப்பானது பெண்களுக்கான வழக்குகளை விசாரிக்க இந்தியா முழுவதும் மாவட்டம் வாரியாக சென்று விசாரணை நடத்துகிறது. போலீசாரால் தீா்க்க முடியாத வழக்குகளை மகிளா ஜன் சுன்வைவ் அமைப்பு ஏற்று நடத்தி வருகிறது.

மேலும், வடமாநிலங்கள் உத்திரப்பிரதேசம், பீகார், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களின் குற்ற எண்ணிக்கையை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் குற்ற எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தமிழக போலீசார் எங்கள் அமைப்பிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் விசாரணை மேற்கொண்டோம். அப்போது அங்கு 100 வழக்குகள் பதிவாகி இருந்தது. கோவையில் 40 வழக்குகள் மட்டுமே உள்ளது. 90 சதவிகித வழக்கு விசாரணை முடிவடைந்துவிட்டது.

இங்கு ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இதற்கு அண்டை மாவட்டத்தை சேர்ந்த 2 இடைநிலை காவலர்கள் உறுதுணையாக இருந்தனர். தொடர்ந்து, எங்கள் அமைப்பின் சார்பில் அவர்கள் மீதும் விசாரணை எடுக்க கமிஷன் அமைத்துள்ளோம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்ள பெண்கள் புகார்களை அளிக்க முன்வர வேண்டும். திருப்பூரில் பெண்ணை தாக்கியதாக டி.எஸ்.பி. மீது எந்த புகாரும் எங்கள் அமைப்புக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...