மகளிர் வழக்குகளை கையாளுவது மற்றும் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் மகளிர் வழக்குகளை கையாளுவது மற்றும் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் செயலாளர் ரேகாசர்மா தலைமையில் பெண்களுக்கு எதிரான வழக்குகளை இந்தியா முழுவதும் காவல்துறை எப்படி கையாள்கிறது எனவும், வழக்குகள் உடனே பதிவு செய்யப்படுகிறதா என்பது குறித்தும் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

இந்த கூட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமான வழக்குகள், வரதட்சணை பிரச்சனைகள், பெண்கள் பணியிடங்களில் தாக்கப்படுதல், பொது இடங்களில் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுக்கும் புகார்களுக்கு காவல்துறை உடனே வழக்கினை பதிவு செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முதலுதவி மற்றும் சட்ட ரீதியான உதவிகளை செய்வது குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற சூழ்நிலை  உருவாகியுள்ள நிலையில் நிர்பயா வழக்கில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினை பெண்கள் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேசிய மகளிர் ஆணையம் நடத்தும் இந்த கூட்டத்தின் மூலமாக காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கும் 40 வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...