மகளிர் வழக்குகளை கையாளுவது மற்றும் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் மகளிர் வழக்குகளை கையாளுவது மற்றும் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் செயலாளர் ரேகாசர்மா தலைமையில் பெண்களுக்கு எதிரான வழக்குகளை இந்தியா முழுவதும் காவல்துறை எப்படி கையாள்கிறது எனவும், வழக்குகள் உடனே பதிவு செய்யப்படுகிறதா என்பது குறித்தும் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

இந்த கூட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமான வழக்குகள், வரதட்சணை பிரச்சனைகள், பெண்கள் பணியிடங்களில் தாக்கப்படுதல், பொது இடங்களில் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுக்கும் புகார்களுக்கு காவல்துறை உடனே வழக்கினை பதிவு செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முதலுதவி மற்றும் சட்ட ரீதியான உதவிகளை செய்வது குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற சூழ்நிலை  உருவாகியுள்ள நிலையில் நிர்பயா வழக்கில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினை பெண்கள் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேசிய மகளிர் ஆணையம் நடத்தும் இந்த கூட்டத்தின் மூலமாக காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கும் 40 வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...