“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக இயக்கத்தை பலவீனப்படுத்துவதாக விமர்சித்தார்.


Coimbatore:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய செயல்பாடுகள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை பலவீனப்படுத்தி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு நாட்களே ஆன நிலையில் அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாக பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.

“துறைகள் தற்போது தான் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசின் செயல்பாடுகள் படிப்படியாக முன்னேறும். வீட்டுப் பொருளாதாரம் குறித்து திடீரென கேள்வி கேட்டால் உடனே எல்லாவற்றையும் சொல்ல முடியாததைப் போல, அரசின் நிர்வாகமும் கட்டுக்கோப்பாக முன்னேறும்,” என்றார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் ஆரம்ப நடவடிக்கைகளைப் பற்றி பேசிய அவர், 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறினார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், பேருந்து நிலையங்கள் மற்றும் கோவில்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இது பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் கூறினார்.

“முதலமைச்சர் விஜய் போன்றவர் மட்டுமே பதவியேற்ற உடனேயே இவ்வளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்,” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதிமுக குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகளை பார்க்கும் போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக இயக்கம் பலவீனமடைந்துள்ளது போல தெரிகிறது,” என்றார்.

“நான் தான் எல்லாம் என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகிறார். காலம் அதற்கான பதிலை சொல்லும்,” என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தார்.

எதிர்கால அரசியல் அமைப்பில் அதிமுகவுக்கு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “இதுவரை அதுபற்றி எதுவும் கூறப்படவில்லை,” என்று அவர் பதிலளித்தார்.

அமைச்சர் செங்கோட்டையனின் இந்த கருத்துகள், அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி விவாதங்கள் மற்றும் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...