கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
அன்னூர், மே 18: அன்னூர் போலீஸ் எஸ்.ஐ. கருப்பசாமி தலைமையிலான போலீசார் அன்னூர் வடக்கு பகுதியில் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அக்கறை செங்கப்பள்ளி அருகே உள்ள தொட்டி பாளையம் பகுதியில், சுப்பிரமணியம் (62) என்பவர் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சுப்பிரமணியத்தை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 147 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட சுப்பிரமணியத்தை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.