கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வீரகேரளம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர். ஏணியை துண்டாக்குவதற்காக தண்டவாளத்தில் வைத்ததாக விசாரணையில் தெரியவந்தது.


Coimbatore: கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த விவகாரத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். பழைய இரும்பு சேகரிப்பு தொழில் செய்யும் இவர்கள் ஏணியை துண்டாக்குவதற்காக இவ்வாறு செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த மே 9ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில், கோவை வடக்கு மற்றும் பீளமேடு இடையே வந்த அதிவிரைவு ரயில், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த அலுமினிய ஏணி மீது மோதியது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினர் சேதமடைந்த ஏணியை அப்புறப்படுத்திய பின்னர், ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சொத்துகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இருவரது உருவம் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ரத்தினபுரி ரயில்வே மேம்பாலப் பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பாலத்தின் அடியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தங்கியிருந்த வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (35), காரமடை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (45) ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது இவர்களின் உருவம் ஒத்துப்போனது தெரியவந்தது. விசாரணையில், மது பாட்டில்கள் மற்றும் பழைய இரும்புப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் இவர்கள், கடந்த 9ஆம் தேதி ஒரு அலுமினிய ஏணியை பழைய இரும்புக் கடையில் விற்க முயன்றதாக தெரியவந்தது.

ஆனால், கடைக்காரர் அதை முழுமையாக வாங்க மறுத்து, துண்டுகளாக வெட்டி வருமாறு கூறியுள்ளார். ஏணியை துண்டாக்குவதற்காக எளிதான வழியைத் தேடிய இவர்கள், தண்டவாளத்தில் வைத்து ரயில் ஏறி அது உடையட்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...