கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 10 சட்டமன்றத் தொகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
Coimbatore: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய தீவிர சோதனையில் கடந்த இரு நாள்களில் மொத்தம் ரூ.8 கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்து 293 மதிப்பிலான ரொக்கப் பணம், தங்கம் மற்றும் பிற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணிசமான அளவு பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் இணைந்து நடத்திய சோதனையில் ரூ.3.30 கோடி ரொக்கப் பணமும், ரூ.4.40 கோடி மதிப்பிலான 3,683.75 கிராம் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொகுதி வாரியாக பார்த்தால், பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் ரூ.36.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மாவட்டத்தில் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதியாக உள்ளது. கிணத்துக்கடவு தொகுதியில் ரூ.4.41 லட்சமும், வால்பாறை தொகுதியில் ரூ.3.50 லட்சமும், கோவை வடக்கு தொகுதியில் ரூ.2.02 லட்சமும், சிங்காநல்லூர் தொகுதியில் ரூ.1.72 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பணம் மற்றும் நகைகள் பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும்படையினர் அனைத்து தொகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவது தொடர்பான புகார்கள் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணிசமான அளவு பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் இணைந்து நடத்திய சோதனையில் ரூ.3.30 கோடி ரொக்கப் பணமும், ரூ.4.40 கோடி மதிப்பிலான 3,683.75 கிராம் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொகுதி வாரியாக பார்த்தால், பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் ரூ.36.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மாவட்டத்தில் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதியாக உள்ளது. கிணத்துக்கடவு தொகுதியில் ரூ.4.41 லட்சமும், வால்பாறை தொகுதியில் ரூ.3.50 லட்சமும், கோவை வடக்கு தொகுதியில் ரூ.2.02 லட்சமும், சிங்காநல்லூர் தொகுதியில் ரூ.1.72 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பணம் மற்றும் நகைகள் பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும்படையினர் அனைத்து தொகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவது தொடர்பான புகார்கள் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.