கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Coimbatore: கோவையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்கில் போலீசார் தொடர்ச்சியாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த வகையில், கடைவீதி போலீசாரின் சமீபத்திய அதிரடி சோதனையில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடைவீதி காவல்நிலைய போலீசார் நேற்று தெற்கு உக்கடத் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த மூன்று இளைஞர்களை போலீசார் கவனித்தனர். உடனடியாக அவர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது, மூவரும் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்ததால் போலீசாரின் சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து அவர்கள் மீது தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் அவர்கள் மெத்தாம்பெட்டமைன் என்ற ஆபத்தான போதைப்பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தெற்கு உக்கடத்தை சேர்ந்த அப்துல் பஷித் (22), சதாம் உசேன் (29) மற்றும் கரும்புக்கடையை சேர்ந்த முகமத் சுஹைப் (23) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவையில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் இளைஞர்களை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைவீதி காவல்நிலைய போலீசார் நேற்று தெற்கு உக்கடத் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த மூன்று இளைஞர்களை போலீசார் கவனித்தனர். உடனடியாக அவர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது, மூவரும் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்ததால் போலீசாரின் சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து அவர்கள் மீது தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் அவர்கள் மெத்தாம்பெட்டமைன் என்ற ஆபத்தான போதைப்பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தெற்கு உக்கடத்தை சேர்ந்த அப்துல் பஷித் (22), சதாம் உசேன் (29) மற்றும் கரும்புக்கடையை சேர்ந்த முகமத் சுஹைப் (23) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவையில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் இளைஞர்களை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.