குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகசுந்தரம் ராஜினாமா செய்துள்ளார்.
Coimbatore:
கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் TR சண்முகசுந்தரம், தமது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு பணிவான வணக்கம் தெரிவித்து, கோவை வடக்கு மாவட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தனது குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு பணி சுமைகள் காரணமாக, தாம் வகித்து வந்த பதவியிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
TR சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திமுக அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தவர். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து உள்ளூர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டார்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார்.
அண்மையில் 2026 தேர்தலை முன்னிட்டு, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்த சம்பவங்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.
இந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருப்பது கோவை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது.
கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் TR சண்முகசுந்தரம், தமது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு பணிவான வணக்கம் தெரிவித்து, கோவை வடக்கு மாவட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தனது குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு பணி சுமைகள் காரணமாக, தாம் வகித்து வந்த பதவியிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
TR சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திமுக அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தவர். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து உள்ளூர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டார்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார்.
அண்மையில் 2026 தேர்தலை முன்னிட்டு, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்த சம்பவங்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.
இந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருப்பது கோவை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது.