கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூறிய பிரேம்குமார் என்பவரால் ரூ.45.50 லட்சம் மோசடி செய்யப்பட்டார். இவரது ஆதார் எண் பயன்படுத்தி கர்நாடகாவில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு பணம் அனுப்பப்பட்டதாக கூறி மிரட்டி பணம் பறித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை அருகே சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஸ் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (வயது 70), லக்னோவில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறிய பிரேம்குமார் என்பவரால் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஸ் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 70). இவர் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் அப் நம்பருக்கு பிரேம்குமார் என்பவர் தொடர்பு கொண்டார். அப்போது பிரேம்குமார், லக்னோவில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினார்.


அவர் குணசேகரனிடம், "உங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளில் தீவிரவாத இயக்கத்திற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது" என்று கூறினார். இதை குணசேகரன் மறுத்தார்.


ஆனால் பிரேம்குமார் குணசேகரனை மிரட்டி பல்வேறு தவணைகளில் ரூ.45 லட்சத்து 50 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு அந்த பணத்தை அவருக்கு திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக குணசேகரன் விசாரித்த பிறகுதான் பிரேம்குமார் மோசடி செய்தது தெரியவந்தது.


இதையடுத்து குணசேகரன் கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த மோசடி தொடர்பாக தற்போது விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி செய்த பிரேம்குமாரைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...