கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூறிய பிரேம்குமார் என்பவரால் ரூ.45.50 லட்சம் மோசடி செய்யப்பட்டார். இவரது ஆதார் எண் பயன்படுத்தி கர்நாடகாவில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு பணம் அனுப்பப்பட்டதாக கூறி மிரட்டி பணம் பறித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை அருகே சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஸ் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (வயது 70), லக்னோவில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறிய பிரேம்குமார் என்பவரால் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஸ் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 70). இவர் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் அப் நம்பருக்கு பிரேம்குமார் என்பவர் தொடர்பு கொண்டார். அப்போது பிரேம்குமார், லக்னோவில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினார்.


அவர் குணசேகரனிடம், "உங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளில் தீவிரவாத இயக்கத்திற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது" என்று கூறினார். இதை குணசேகரன் மறுத்தார்.


ஆனால் பிரேம்குமார் குணசேகரனை மிரட்டி பல்வேறு தவணைகளில் ரூ.45 லட்சத்து 50 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு அந்த பணத்தை அவருக்கு திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக குணசேகரன் விசாரித்த பிறகுதான் பிரேம்குமார் மோசடி செய்தது தெரியவந்தது.


இதையடுத்து குணசேகரன் கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த மோசடி தொடர்பாக தற்போது விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி செய்த பிரேம்குமாரைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...