கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம், skating செய்தவாறு பங்கேற்றனர். வாக்குவீரன் இருவாச்சி பறவையும் இடம்பெற்றது.


Coimbatore: ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.

வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு சார்பிலும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், சிலம்பம் மற்றும் skating செய்தவாறும் பேரணி மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இந்த வாக்கத்தான் நிகழ்வில் தேர்தல் அடையாளச் சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்ட வாக்குவீரன் இருவாச்சி பறவையும் இடம்பெற்றிருந்தது.

தேர்தல் நாளன்று அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும், முதல் முறை வாக்களிப்பவர்கள் நன்கு சிந்தித்து கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர். அப்போதுதான் சிறந்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் இளைஞர்களிடையே வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...