கிணத்துக்கடவு தொகுதியில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு

கிணத்துக்கடவு தொகுதி குறிச்சி பகுதியில் எம்எல்ஏ செ.தாமோதரன் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி குறிச்சி பகுதி 97வது வட்டக் கழகத்திற்குட்பட்ட பழனியப்பா லே அவுட்டில் புதிய நியாயவிலைக் கடை கட்டித்தர வேண்டி எம்எல்ஏ செ.தாமோதரனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் ரூபாய் 15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ செ.தாமோதரன் திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள்சாமி, 94வது வட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணன், 94A வட்ட கழக செயலாளர் மாணிக்கவாசகம், 96வது வட்ட கழக செயலாளர் செந்தில்குமார், 96A வது வட்ட கழக செயலாளர் உதயகுமார், 97வது வட்ட கழக செயலாளர் கேபிள் பாபு, 97A வட்ட கழக செயலாளர் RTO பிரகாஷ், 98வது வட்ட கழக செயலாளர் நிஜாம் மற்றும் 98A வது வட்ட கழக செயலாளர் குமாரசாமி ஆகியோருடன் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...