வடகிழக்கு பருவமழை: பேரிடர் புகார் அளிக்க எளிய முறை - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் புகார் அளிக்க எளிய முறையை அறிவித்துள்ளது. 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம், TN Alert செயலி மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் புகார் அளிக்க எளிய முறையை அறிவித்துள்ளது. அக்டோபர் 7 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், பேரிடர் குறித்து புகார் அளிக்கவும், மழையின் அளவு உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளவும் பல்வேறு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1077, 0422-2301114 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், வட்ட வாரியாக துணை ஆட்சியர் அளவில் கண்காணிப்புக் குழுக்களும், பல துறை அலுவலர்கள் அடங்கிய மண்டலக்குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 66 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மழைநீர் தேங்காமல் செல்ல வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளன. பள்ளிக் கட்டிடங்கள் பழுது பார்க்கப்பட்டு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு 'TN Alert' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது இருப்பிட வானிலை, முன்னெச்சரிக்கை செய்திகள், தினசரி மழையளவு, நீர்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம், பாதிப்படையக்கூடிய பகுதிகளின் விவரம், பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய அறிவுரைகள் ஆகியவற்றை தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். மேலும், மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலி மூலம் எளிதாக புகார் அளிக்க முடியும்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...