கோவை 27வது வார்டில் அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூட்டம்: கோரிக்கைகள் கேட்டறிந்த திமுக செயலாளர் நா. கார்த்திக்

கோவை பீளமேடு 27வது வார்டில் உள்ள ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக செயலாளர் நா. கார்த்திக் கலந்துகொண்டு குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.


கோவை: கோவை பீளமேடு வார்டு எண் 27-ல் உள்ள "ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்பு" வளாகத்தில் அக்டோபர் 5 அன்று "ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூட்டம்" நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா. கார்த்திக் கலந்து கொண்டார். அப்போது குடியிருப்போர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தனர். தார்ச்சாலை சீரமைப்பு, குப்பை மேலாண்மை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.

குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்த நா. கார்த்திக், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் பீளமேடு பகுதி-1 திமுக செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன், 27வது வட்டக் கழக துணைச் செயலாளர் சாந்தி நகர் அ. செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி ரமேஷ் குமார், வட்டக் கழகப் பொருளாளர் அங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், திமுக கழக மூத்த முன்னோடிகளான மில் ரவி, கிருஷ்ணமூர்த்தி, புருஷோத்தமன், கங்குவார் சீனு, மதிவாணன் மற்றும் பல திமுக கழக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...