கோவை 27வது வார்டில் அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூட்டம்: கோரிக்கைகள் கேட்டறிந்த திமுக செயலாளர் நா. கார்த்திக்

கோவை பீளமேடு 27வது வார்டில் உள்ள ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக செயலாளர் நா. கார்த்திக் கலந்துகொண்டு குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.


கோவை: கோவை பீளமேடு வார்டு எண் 27-ல் உள்ள "ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்பு" வளாகத்தில் அக்டோபர் 5 அன்று "ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூட்டம்" நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா. கார்த்திக் கலந்து கொண்டார். அப்போது குடியிருப்போர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தனர். தார்ச்சாலை சீரமைப்பு, குப்பை மேலாண்மை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.

குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்த நா. கார்த்திக், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் பீளமேடு பகுதி-1 திமுக செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன், 27வது வட்டக் கழக துணைச் செயலாளர் சாந்தி நகர் அ. செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி ரமேஷ் குமார், வட்டக் கழகப் பொருளாளர் அங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், திமுக கழக மூத்த முன்னோடிகளான மில் ரவி, கிருஷ்ணமூர்த்தி, புருஷோத்தமன், கங்குவார் சீனு, மதிவாணன் மற்றும் பல திமுக கழக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...