கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணை: உயர்நீதிமன்ற குழு நேரில் ஆய்வு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற நியமித்த அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தது. பழப்பண்ணையை மூடக்கூடாது என நூற்றக்கணக்கானோர் மனு அளித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தது.

கடந்த 1900 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பழப்பண்ணையில் மங்குஸ்தான், துரியன், வாட்டர் ஆப்பிள், முட்டைப் பழம், சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பல்வகை பழங்கள், மூலிகை செடிகள், மலர் வகைகள் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளுக்கான மரக்கன்றுகளும் இங்கு தயார் செய்யப்பட்டு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



இப்பண்ணை யானை வழித்தடத்தில் அமைந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ்குமார், பரதசக்கிரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு, இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூன்று வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை நியமித்தது.

இதன்படி, உயர்நீதிமன்றம் அமைத்த குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சி.மோகன், ராகுல் பாலாஜி, சந்தானராமன் மற்றும் அரசு வழக்கறிஞர் முகமது சாதிக் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று கல்லாறு அரசு பழப்பண்ணைக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.



அப்போது, மாணவ மாணவிகள், சமூக நல ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கல்லாறு பழப்பண்ணையை மூடக்கூடாது என உயர்நீதிமன்ற குழுவினரிடம் மனுக்களை அளித்தனர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் குழுவினரை நேரில் சந்தித்து கல்லாறு பழப்பண்ணையின் அவசியம் குறித்தும், 120 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழப்பண்ணையை தற்போது திடீரென யானை வழித்தடம் என கூறுவதை ஏற்க இயலாது என்றும் தெரிவித்தார்.

குழுவினர் பண்ணையை முழுவதுமாக ஆய்வு நடத்தினர். ஆவணங்களின் அடிப்படையில் யானைகள் இப்பகுதியில் நடமாடும் இடங்களா என ஆய்வு செய்தனர். அப்போது தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் உடனிருந்து உதவினர்.

ஆய்விற்குப் பின்னர் இது குறித்த விரிவான ஆய்வறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக் குழுவினர் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...