சூலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு; தாளியூரில் புதிய சுகாதார மையம் திறப்பு

கோயம்புத்தூர்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் சூலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தாளியூரில் ரூ.58.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.


Coimbatore: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்தபோது, இன்று அதிகாலை திடீரென சூலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு வந்திருந்த புறநோயாளிகளையும், உள்நோயாளிகளையும் நேரில் சந்தித்த அமைச்சர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்து விசாரித்தார். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதனை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தார்.



இந்த ஆய்வின் போது, கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், தலைமை மருத்துவர் வாணி ரங்கராஜன், மருத்துவர் கஜேந்திரன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

அதே நாளில், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் தாளியூரில், ரூ.58.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், ஒன்றிய கழக செயலாளர் CMK.குமார் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...