சூலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு; தாளியூரில் புதிய சுகாதார மையம் திறப்பு

கோயம்புத்தூர்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் சூலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தாளியூரில் ரூ.58.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.


Coimbatore: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்தபோது, இன்று அதிகாலை திடீரென சூலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு வந்திருந்த புறநோயாளிகளையும், உள்நோயாளிகளையும் நேரில் சந்தித்த அமைச்சர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்து விசாரித்தார். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதனை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தார்.



இந்த ஆய்வின் போது, கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், தலைமை மருத்துவர் வாணி ரங்கராஜன், மருத்துவர் கஜேந்திரன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

அதே நாளில், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் தாளியூரில், ரூ.58.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், ஒன்றிய கழக செயலாளர் CMK.குமார் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...