பொள்ளாச்சி அருகே கிராம சபை கூட்டம்: பெண்கள் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி அருகே வடபுதூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பெண்கள் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள வடபுதூர் கிராமத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடபுதூர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது, குழந்தை திருமணத்தைத் தடுப்பது, புகையிலை விற்பனையை முற்றிலும் ஒழிப்பது ஆகியவை அடங்கும். மேலும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் படிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.



கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக் குமார், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், ஒன்றிய செயலாளர் செந்தில், திமுக பொறியாளர் அணி நிர்வாகி அசோக் குமார் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...