பொள்ளாச்சி அருகே கிராம சபை கூட்டம்: பெண்கள் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி அருகே வடபுதூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பெண்கள் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள வடபுதூர் கிராமத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடபுதூர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது, குழந்தை திருமணத்தைத் தடுப்பது, புகையிலை விற்பனையை முற்றிலும் ஒழிப்பது ஆகியவை அடங்கும். மேலும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் படிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.



கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக் குமார், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், ஒன்றிய செயலாளர் செந்தில், திமுக பொறியாளர் அணி நிர்வாகி அசோக் குமார் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...