பொள்ளாச்சி அருகே கிராம சபை கூட்டம்: பெண்கள் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி அருகே வடபுதூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பெண்கள் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள வடபுதூர் கிராமத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடபுதூர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது, குழந்தை திருமணத்தைத் தடுப்பது, புகையிலை விற்பனையை முற்றிலும் ஒழிப்பது ஆகியவை அடங்கும். மேலும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் படிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.



கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக் குமார், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், ஒன்றிய செயலாளர் செந்தில், திமுக பொறியாளர் அணி நிர்வாகி அசோக் குமார் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...