வால்பாறை அருகே இடியும் நிலையில் பயணியர் நிழற்கூரை: புதிய நிழற்கூரை கட்ட மக்கள் கோரிக்கை

வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் உள்ள பயணியர் நிழற்கூரை சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பயணியர் நிழற்கூரை இடியும் நிலையில் உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். வால்பாறையில் உள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் மாதா கோவில் சந்திப்பில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த நிழற்கூரை தற்போது பாழடைந்து காணப்படுகிறது.

நிழற்கூரையின் பக்கவாட்டு சுவர்களும், மேற்கூரையும் பெரிதும் சேதமடைந்துள்ளன. இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் இந்த நிழற்கூரையை பயன்படுத்துவதில்லை. மேலும், நிழற்கூரை பள்ளத்தில் அமைந்திருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு வேறு இடமில்லாத நிலை நிலவுகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த நிழற்கூரையை இரவு நேரங்களில் சிலர் திறந்தவெளி மதுபான விடுதியாக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மாதா கோவில் சந்திப்பில் புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...