வால்பாறை அருகே இடியும் நிலையில் பயணியர் நிழற்கூரை: புதிய நிழற்கூரை கட்ட மக்கள் கோரிக்கை

வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் உள்ள பயணியர் நிழற்கூரை சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பயணியர் நிழற்கூரை இடியும் நிலையில் உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். வால்பாறையில் உள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் மாதா கோவில் சந்திப்பில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த நிழற்கூரை தற்போது பாழடைந்து காணப்படுகிறது.

நிழற்கூரையின் பக்கவாட்டு சுவர்களும், மேற்கூரையும் பெரிதும் சேதமடைந்துள்ளன. இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் இந்த நிழற்கூரையை பயன்படுத்துவதில்லை. மேலும், நிழற்கூரை பள்ளத்தில் அமைந்திருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு வேறு இடமில்லாத நிலை நிலவுகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த நிழற்கூரையை இரவு நேரங்களில் சிலர் திறந்தவெளி மதுபான விடுதியாக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மாதா கோவில் சந்திப்பில் புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...