கோவையில் நீர்த்தேக்க தொட்டிகள், குப்பை மாற்று நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் செப்டம்பர் 30 அன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்தார். நீர்த்தேக்க தொட்டிகள், குப்பை மாற்று நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் செப்டம்பர் 30 அன்று நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

86வது வார்டில் உள்ள புல்லுக்காடு பகுதியில் சூயஸ் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கான பொருட்களை ஆணையாளர் பார்வையிட்டார். DI 600mm, 300mm Slice வால்வு, Air வால்வு மற்றும் Butterfly வால்வு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.



48வது வார்டில் உள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள குப்பை மாற்று நிலையத்தின் புனரமைப்பு பணிகளையும் ஆணையாளர் பார்வையிட்டார். இப்பணி 15வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.



அதே பகுதியில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.



68வது வார்டில் உள்ள வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தையும் ஆணையாளர் பார்வையிட்டார். பழுதடைந்த கட்டடத்தை புனரமைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.



இந்த ஆய்வுப் பயணத்தில் உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் குமரேசன், நடராஜன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சக்திவேல், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...