கோவையில் நீர்த்தேக்க தொட்டிகள், குப்பை மாற்று நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் செப்டம்பர் 30 அன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்தார். நீர்த்தேக்க தொட்டிகள், குப்பை மாற்று நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் செப்டம்பர் 30 அன்று நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

86வது வார்டில் உள்ள புல்லுக்காடு பகுதியில் சூயஸ் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கான பொருட்களை ஆணையாளர் பார்வையிட்டார். DI 600mm, 300mm Slice வால்வு, Air வால்வு மற்றும் Butterfly வால்வு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.



48வது வார்டில் உள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள குப்பை மாற்று நிலையத்தின் புனரமைப்பு பணிகளையும் ஆணையாளர் பார்வையிட்டார். இப்பணி 15வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.



அதே பகுதியில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.



68வது வார்டில் உள்ள வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தையும் ஆணையாளர் பார்வையிட்டார். பழுதடைந்த கட்டடத்தை புனரமைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.



இந்த ஆய்வுப் பயணத்தில் உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் குமரேசன், நடராஜன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சக்திவேல், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...