பெண்களை இழிவுபடுத்த வேண்டாம் - குக் வித் கோமாளி சர்ச்சை குறித்து அறந்தாங்கி நிஷா கருத்து

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்துவதை கண்டித்த அவர், பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பேசினார்.



Coimbatore: கோவை காளபட்டி பகுதியில் நடைபெற்ற கே.ஜி.எஃப் கண்காட்சி மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, பெண்களின் முன்னேற்றம் குறித்தும், சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி சர்ச்சை குறித்தும் கருத்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய அறந்தாங்கி நிஷா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். "பெரியார் சொன்னது போல, பெண்களிடம் கரண்டியை புடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுத்து பாருங்கள். இன்று பெண்கள் தான் அதிகம் மேடை ஏறுகின்றனர். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஆண்கள் இருக்கின்றனர்," என்று அவர் கூறினார்.



குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட போது, அறந்தாங்கி நிஷா, "அங்கே என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பெண்களுக்கு என்ன நடந்தாலும் அந்த இடத்தில் நான் இருப்பேன். ஒரு பெண்ணாக நான் இதை கண்டிக்கிறேன். ஒரு பெண்ணை தயவு செய்து இழிவாக பேச வேண்டாம்," என்று தெரிவித்தார்.

தனது சினிமா வாய்ப்புகள் குறித்தும் பேசிய அவர், "தற்போது சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். நல்ல நகைச்சுவை பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சி. சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'வள்ளிமயில்' படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படம் வெளியானால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்," என்றார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...