பெண்களை இழிவுபடுத்த வேண்டாம் - குக் வித் கோமாளி சர்ச்சை குறித்து அறந்தாங்கி நிஷா கருத்து

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்துவதை கண்டித்த அவர், பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பேசினார்.



Coimbatore: கோவை காளபட்டி பகுதியில் நடைபெற்ற கே.ஜி.எஃப் கண்காட்சி மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, பெண்களின் முன்னேற்றம் குறித்தும், சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி சர்ச்சை குறித்தும் கருத்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய அறந்தாங்கி நிஷா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். "பெரியார் சொன்னது போல, பெண்களிடம் கரண்டியை புடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுத்து பாருங்கள். இன்று பெண்கள் தான் அதிகம் மேடை ஏறுகின்றனர். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஆண்கள் இருக்கின்றனர்," என்று அவர் கூறினார்.



குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட போது, அறந்தாங்கி நிஷா, "அங்கே என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பெண்களுக்கு என்ன நடந்தாலும் அந்த இடத்தில் நான் இருப்பேன். ஒரு பெண்ணாக நான் இதை கண்டிக்கிறேன். ஒரு பெண்ணை தயவு செய்து இழிவாக பேச வேண்டாம்," என்று தெரிவித்தார்.

தனது சினிமா வாய்ப்புகள் குறித்தும் பேசிய அவர், "தற்போது சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். நல்ல நகைச்சுவை பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சி. சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'வள்ளிமயில்' படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படம் வெளியானால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்," என்றார்.

Newsletter

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...