வால்பாறை சாலைகளில் அலையும் கால்நடைகள்: விபத்து அபாயம் குறித்து நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

வால்பாறை நகர சாலைகளில் அலையும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: வால்பாறை நகர பகுதியில் வீட்டில் வளர்க்கப்படும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் சாலைகளில் அலைந்து திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் உள்ள சாலைகள் குறுகலானவை. காமராஜர் நகர் முதல் புதிய பேருந்து நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. ஒவ்வொரு வாகனமும் மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் சாலைகளில் நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதை பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த பிரச்சினை குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அலைந்து திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சாலைகளில் மாடுகளை விடுவதை தடுக்கவும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...