கோவை: மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

கோவை வடக்கு வட்டத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தின் வடக்கு வட்டத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கினார்.

பெரியநாயக்கன்பாளையம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் சுதன் சாய், கை மற்றும் கால்களில் குறைபாடுகளுடன் பிறந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று (20.09.2024) மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, சுதன் சாய்க்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்வில் தாட்கோ மேலாளர் கு.மகேஸ்வரி உடனிருந்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...