"வேண்டும், வேண்டும் மதுக்கடை வேண்டும்" - காரணம்பேட்டையில் ஒரு 'குடி'மகனின் கதறல்

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவ்வாறான சாலைகளில் இருந்த மதுபானக் கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, அகற்றப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் நிறுவ மதுபானக் கடை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பெண்கள் குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கப்படும் பட்சத்தில் மது அருந்த வருவோரால் பெண்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, அவ்வாறான முடிவை மதுபானக் கடை நிர்வாகத்தினர் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சாலையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு உட்பட்ட கோடங்கிபாளையம், காரணம்பேட்டை பகுதியில் "வேண்டும் வேண்டும் ஒயின் சாப் (மதுக்கடை) வேண்டும்" என்ற வார்த்தைகள் அடங்கிய பதாகையினை கழுத்தில் மாட்டிக் கொண்டு சுப்ரமணியம் என்பவர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், அவர் அணிந்திருந்த அந்த பதாகையில் அகற்றப்பட்ட மதுக்கடை எண்- 1928 அல்லது 2263 கடை வேண்டும் என எழுதப்பட்டிருந்து. 

இதனிடையே, சுப்ரமணியம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு வந்த அவரது மனைவி தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து, இனிமேல் மது வாங்கிக் குடிக்க பணம் தருவதாக அவரது மனைவி ஒப்புக்கொண்டதையடுத்து சுப்ரமணியம் தனது தர்ணாவை கைவிட்டார்.

தமிகத்தில் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என தன்னெழுச்சியாக பெண்கள் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இச்சூழ்நிலையில் மதுக்கடை வேண்டும் என இவ்வாறான 'குடி'மகன்கள் போராட்டங்களில் ஈடுபடுவது அனைத்துத் தரப்பினரையும் அதிர்ப்திக்குள்ளாக்கிள்ளது.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...