கோவையில் விநாயகர் சிலைகளை கரைக்க குளக்கரைகளில் முன்னேற்பாடுகள் தீவிரம்

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 708 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. செப்டம்பர் 9, 11 தேதிகளில் ஊர்வலம் நடைபெற உள்ளது. சிலைகளை கரைக்க குனியமுத்தூர் உள்ளிட்ட குளக்கரைகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


கோவை: கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் 708 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக குனியமுத்தூர் உள்ளிட்ட முக்கிய குளக்கரைகளில் பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக மொத்தம் 3,500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி (தமிழகம்), பாரத் சேனா மற்றும் பிற இந்து அமைப்புகள் சார்பில், செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.

விநாயகர் சிலைகள் சிங்காநல்லூர், குறிச்சி குளம், குனியமுத்தூர், வெள்ளக்கிணறு மற்றும் முத்தண்ணங்குளம் ஆகிய இடங்களில் கரைக்கப்பட உள்ளன. இந்த இடங்களில் சிலைகளை பாதுகாப்பாக கரைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.



குறிப்பாக, குனியமுத்தூர் குளக்கரையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.



விழா காலத்தில் எந்தவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

Newsletter

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...

பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செ...

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...