கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 2162 பேர் கைது

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு தற்காலிகமாக தற்போது தமிழகம் திரும்பியுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், லாரி, ஆட்டோ, தனியார் பேருந்து உள்ளிட்டு அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.



மேலும், தமிழகத்தில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல், ரயிவே நிலையம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. இதில், திமுக, கம்யூனிஸ்ட், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கைதாகினர்.

கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகள் உட்பட 1283 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். அதில் 35 பெண்கள். மற்றும்  கோவை மாநகர அளவில் 17 இடங்களில் பேராட்டங்களில் ஈடுபட்ட 27 பெண்கள் உட்பட 879 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...