உதகை குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளிக்கு சி.ஐ.எஸ் சர்வதேச அங்கிகாரம்


நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் முதலிடம் வகிக்கும் குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது.



குறிப்பாக துப்பாக்கிசுடுதல் போட்டிகளில் ஆண்டு தோறும் இப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.

மேலும், இப்பள்ளியில் கடல் மட்டத்திலிருந்து 2250 மீட்டர் உயரத்தில் அதுவும் இந்தியாவிலேயே அதிக உயரத்தில் 70 மீட்டர் பவுண்டரிகளைக் கொண்ட புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.



இந்தியாவிலேயே உதகை குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைதானம் தான் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு ஐபிஎல் உட்பட பிற போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது. பள்ளி வளாகத்தில் துப்பாக்கி சுடும் உள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் அனைத்து பயிற்சிகளும் சிறந்த முறையில் அளிக்கப்படும் நிலையில் உள்கட்டமைப்பு உட்பட அனைத்து வசதிகளும் உள்ளதால், இந்தியாவில் உள்ள சிறந்த சர்வேதேச பள்ளிகளில் குட்செப்பர்டு சர்வதேச பள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்திய அளவில் முதல் சர்வதேச பள்ளியாக (கவுன்சில் ஆப்இன்டர் நேசனல் பள்ளி) சி.ஐ.எஸ் சர்வதேச சான்றிதழ் இப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய புதுமையான கல்வி முறையை இப்பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பாக பயில இவ்விருது வழி வகை செய்யும் என குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில், இந்த சர்வதேச அங்கிகாரம் பெற்றிருப்பதன் மூலம் சுதந்திரமான உலகளாவிய கல்வி நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் திறம்பட கல்வி முறைகளை புதுப்பிக்கவும் முடியும்.

உலகத் தரமான கல்வி சர்வதேச திட்டங்களை இப்பள்ளி வழங்கும். 2010 ஆண்டில் இருந்து சி.ஐ.எஸ்-யில் உறுப்பினராக உள்ள குட்செப்ர்டு சர்வதேச பள்ளி இந்த சர்வதேச அங்கிகாரம் பெற மூன்று ஆண்டுகள் ஆனது. பல்வேறு சிறப்பான ஆய்வுகளுக்கு பிறகு சர்வதேச தர அங்கீகாரம் பெற்று குட்செப்பர்டு பள்ளி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...