பொள்ளாச்சியில் வாகனம் ஸ்டார்ட் செய்ய மறுத்ததால் இளைஞர் கொலை - இருவர் கைது

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் வாகனம் ஸ்டார்ட் செய்ய மறுத்ததால் 21 வயது இளைஞர் அரவிந்த்சாமி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள ஓம் பிரகாஷ் தியேட்டர் அருகே உடலில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார், உடலை மீட்டு பரிசோதனை செய்தனர். உடலில் காயங்களும் கத்திக்குத்து காயங்களும் இருந்தது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பொள்ளாச்சி ஜே ஜே நகரைச் சேர்ந்த 21 வயதான அரவிந்த்சாமி என்பதும், அவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. அரவிந்த்சாமிக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு மாத பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பைசல் மற்றும் மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் பொள்ளாச்சி பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், அவர்களது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் வால்பாறை சாலையில் தள்ளிச் சென்றதாகவும், அப்போது வந்த அரவிந்தை நிறுத்தி வாகனத்தை ஸ்டார்ட் செய்து தருமாறு கேட்டதாகவும் தெரியவந்தது. ஆனால் அரவிந்த் அதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து கிளம்ப முயன்றபோது, விமல் மற்றும் பைசல் இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கி கத்தியால் குத்தியதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...