பொள்ளாச்சியில் வாகனம் ஸ்டார்ட் செய்ய மறுத்ததால் இளைஞர் கொலை - இருவர் கைது

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் வாகனம் ஸ்டார்ட் செய்ய மறுத்ததால் 21 வயது இளைஞர் அரவிந்த்சாமி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள ஓம் பிரகாஷ் தியேட்டர் அருகே உடலில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார், உடலை மீட்டு பரிசோதனை செய்தனர். உடலில் காயங்களும் கத்திக்குத்து காயங்களும் இருந்தது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பொள்ளாச்சி ஜே ஜே நகரைச் சேர்ந்த 21 வயதான அரவிந்த்சாமி என்பதும், அவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. அரவிந்த்சாமிக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு மாத பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பைசல் மற்றும் மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் பொள்ளாச்சி பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், அவர்களது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் வால்பாறை சாலையில் தள்ளிச் சென்றதாகவும், அப்போது வந்த அரவிந்தை நிறுத்தி வாகனத்தை ஸ்டார்ட் செய்து தருமாறு கேட்டதாகவும் தெரியவந்தது. ஆனால் அரவிந்த் அதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து கிளம்ப முயன்றபோது, விமல் மற்றும் பைசல் இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கி கத்தியால் குத்தியதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...