இன்று உலக புவி தினத்தை முன்னிட்டு கோவையில் "மார்ச் ஃபார் சையின்ஸ்" பேரணி

உலகம் முழுவதும் ஏப்ரல் 22ம் தேதியன்று (இன்று) உலக புவி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக புவி தினத்தை முன்னிட்டு புவியின் மகிமையினை போற்றும் வகையில் உலகம் முழுவதும் 500 இடங்களில் "மார்ச் ஃபார் சையின்ஸ்" பேரணி நடைபெற்றது. இதில் ஆசியக் கண்டத்தில் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கோவையிலேயே மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணி நடைபெற்றது.



கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இப்பேரணியினை ஸ்கூல் ஆஃப் சையின்ஸ் மற்றும் ராக் அமைப்பு இணைந்து நடத்தியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் பங்கேற்று பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இதுகுறித்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஸ்கூல் ஆஃப் சையின்ஸ் சாரதா கூறுகையில், விஞ்ஞானம் மூலமாகவே இவ்வுலகில் பல செயல்கள் நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் விஞ்ஞானம் குறித்து பல்வேறு மன நிலைகள் உள்ளது. இதில் தவறான மனநிலைகளை உடனடியாக தவிர்க்க வேண்டும். வரும் காலங்களில் நடக்கவுள்ள தீமைகளை தடுத்து உலகை காக்கும் சக்தி அறிவியல் விஞ்ஞானத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை அனைவரும் ஏற்க வேண்டும்" என்றார்.



இதனைத்தொடர்ந்து, கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் பேசுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணி குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் என்னைச் சந்தித்து அனுமதி கோரினர். அவர்கள் எனக்கு இதுகுறித்தான முழுத் தகவலையும் தெரிவித்தனர். 



விளையாட்டு, தொலைக்காட்சி, பொழுதுபோக்கு என்று மாணவர்கள் தங்களது சுயநலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இச்சமுதாயத்தில் இந்த மாணவர்கள் சமூகநல அக்கறையுடன் என்னைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. அதனாலேயே உடனடியாக அனுமதியளித்தேன். 



இன்று மட்டும் இன்றி ஒவ்வொரு நாளும் நாம் புவி தினத்தை கொண்டாட வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு நாம் இந்த உலகை அழகான முறையில் விட்டுச் செல்ல வேண்டும். இவ்வுலகில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. அவற்றை ஆக்கப்பூர்வமாகவும், அழிவுப்பூர்வமாகவும் பயன்படுத்துவது நம் கையில் தான் உள்ளது" என்றார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணியில் கல்லூரி முதல் சிறுவயதுடைய ஆரம்பப் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று புவியினை போற்றும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்றனர். 

ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கிய இப்பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதிக்குட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாகச் சென்று நிறைவடைந்தது.

Newsletter

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...