கோவையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

கோவை பொள்ளாச்சியில் 60 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஜூலை 15 அன்று இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையப் பகுதியில் பெரும் அளவில் கஞ்சா விற்பனை செய்த இரு நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பசீர் மகன் ரஷீத் (30) மற்றும் உமர் மகன் கலீல் ரகுமான் (44) ஆகியோர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையப் பகுதியில் 60 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இவ்விருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

இப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட இரு நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து, ஜூலை 15 அன்று கஞ்சா வழக்கு குற்றவாளிகளான ரஷீத் (30) மற்றும் கலீல் ரகுமான் (44) ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...