கோவையில் 15 அடி உயர டவரில் யோகாசனம் செய்து 12 வயது சிறுவன் உலக சாதனை

கோவையில் 15 அடி உயர டவரில் ஹஸ்த கோணாசனத்தில் 7 நிமிடங்கள் 20 விநாடிகள் நின்று 12 வயது சிறுவன் சர்வஜித் நாராயணன் யூனியன் உலக சாதனை படைத்தார். சுட்டெரிக்கும் வெயிலில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.


Coimbatore: கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சர்வஜித் நாராயணன், 15 அடி உயரமான டவரில் நின்று கொண்டு ஹஸ்த கோணாசனத்தில் 7 நிமிடங்கள் 20 விநாடிகள் தொடர்ந்து நின்று யூனியன் உலக சாதனை படைத்தார்.

சரண்யா மற்றும் பாலசுந்தரம் தம்பதியரின் மகனான சர்வஜித், ஏழாம் வகுப்பு மாணவராக இருக்கிறார். சிறு வயதிலேயே யோகாவில் இரண்டு கின்னஸ் சாதனைகள் உட்பட பல விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.



இந்த புதிய உலக சாதனை நிகழ்வு, சர்வஜித் பயிலும் வேலம்மாள் போதி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட டவரின் மேல் ஏறிய சர்வஜித், அஷ்ட கோணாசனம் எனும் ஆசனத்தை தொடர்ந்து நிலைநிறுத்தினார்.

ரஷ்யாவிலிருந்து வந்த யூனியன் உலக சாதனை புத்தகத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட், சர்வஜித்தின் சாதனையை நேரடியாக கண்காணித்தார். சாதனையை அங்கீகரித்த அவர், யூனியன் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.



சுட்டெரிக்கும் வெயிலில், 15 அடி உயரத்தில் கைகளை மட்டுமே சமநிலைப்படுத்தி ஆங்கிள் போஸில் யோகா செய்த சர்வஜித்தின் இந்த உலக சாதனையை, அவரது பள்ளியில் பயிலும் சக மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...