கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு விமான சேவை ஜூலை 16 முதல் மீண்டும் தொடக்கம்

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு சரக்கு விமான சேவை, தேவையான பரிசோதனை கருவிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டதால், ஜூலை 16 முதல் மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் அறிவித்தனர்.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு சரக்கு விமான போக்குவரத்து சேவை வருகின்ற ஜூலை 16 முதல் மீண்டும் செயல்படும் என்று கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை விமான நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கான உள்நாட்டு சரக்கு போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மத்திய விமான பாதுகாப்பு கழகத்தின் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான தேவையான பரிசோதனை சாதனங்கள் இல்லாததே இதற்கு காரணமாக இருந்தது.



இந்த நிலையில், தற்போது தேவையான பரிசோதனை கருவிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கோவை விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம், முறையான அனுமதி பெற்று கோவை விமான நிலையத்திலிருந்து பிற நகரங்களுக்கு 100 சதவீதம் சான்று பெற்ற சரக்குகளை அனுப்ப முடியும் என்றும், இந்த சேவை வருகின்ற ஜூலை 16 தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சரக்கு விமான சேவை நிறுத்தப்பட்டதால் வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை உடனுக்குடன் அனுப்ப முடியாமல் இழப்பை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சினை குறித்து பல வர்த்தக அமைப்புகள் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் விமான நிலைய ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...