கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு விமான சேவை ஜூலை 16 முதல் மீண்டும் தொடக்கம்

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு சரக்கு விமான சேவை, தேவையான பரிசோதனை கருவிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டதால், ஜூலை 16 முதல் மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் அறிவித்தனர்.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு சரக்கு விமான போக்குவரத்து சேவை வருகின்ற ஜூலை 16 முதல் மீண்டும் செயல்படும் என்று கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை விமான நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கான உள்நாட்டு சரக்கு போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மத்திய விமான பாதுகாப்பு கழகத்தின் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான தேவையான பரிசோதனை சாதனங்கள் இல்லாததே இதற்கு காரணமாக இருந்தது.



இந்த நிலையில், தற்போது தேவையான பரிசோதனை கருவிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கோவை விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம், முறையான அனுமதி பெற்று கோவை விமான நிலையத்திலிருந்து பிற நகரங்களுக்கு 100 சதவீதம் சான்று பெற்ற சரக்குகளை அனுப்ப முடியும் என்றும், இந்த சேவை வருகின்ற ஜூலை 16 தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சரக்கு விமான சேவை நிறுத்தப்பட்டதால் வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை உடனுக்குடன் அனுப்ப முடியாமல் இழப்பை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சினை குறித்து பல வர்த்தக அமைப்புகள் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் விமான நிலைய ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...