கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது

கோவை வடவள்ளி அருகே உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் நூலக ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: கோவை வடவள்ளி அருகே டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் இயங்கும் தனியார் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் நூலக பொறுப்பு ஆசிரியராக பணிபுரியும் பால்ராஜ் என்பவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பால்ராஜின் பாலியல் தொல்லை அதிகரித்ததால் மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு சிறுமிகளையும் பள்ளி வளாகத்திற்குள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநகர காவல் துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆர் எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ், ஆசிரியர் பால்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலில் பள்ளி முதல்வரிடம் தெரிவித்தும், பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் சென்றது. மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிருந்தா தலைமையிலான குழுவினர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தின் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நூலக பொறுப்பு ஆசிரியர் பால்ராஜ் கைது செய்யப்பட்டார்.

பாலியல் புகார் தொடர்பாக போலீசாருக்கு முறையாக தகவல் அளிக்காத பள்ளி முதல்வர் மகேஸ்வரி, நிர்வாகி தண்டபாணி ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜூலை 12 அன்று போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...