கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது

கோவை வடவள்ளி அருகே உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் நூலக ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: கோவை வடவள்ளி அருகே டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் இயங்கும் தனியார் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் நூலக பொறுப்பு ஆசிரியராக பணிபுரியும் பால்ராஜ் என்பவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பால்ராஜின் பாலியல் தொல்லை அதிகரித்ததால் மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு சிறுமிகளையும் பள்ளி வளாகத்திற்குள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநகர காவல் துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆர் எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ், ஆசிரியர் பால்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலில் பள்ளி முதல்வரிடம் தெரிவித்தும், பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் சென்றது. மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிருந்தா தலைமையிலான குழுவினர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தின் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நூலக பொறுப்பு ஆசிரியர் பால்ராஜ் கைது செய்யப்பட்டார்.

பாலியல் புகார் தொடர்பாக போலீசாருக்கு முறையாக தகவல் அளிக்காத பள்ளி முதல்வர் மகேஸ்வரி, நிர்வாகி தண்டபாணி ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜூலை 12 அன்று போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...