பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் கொலை: மூன்று பேர் கைது

பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் பிரபாகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கோவை போலீசார் விசாரணையில் இளஞ்சிறார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் பிரபாகரன் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளஞ்சிறார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜாவின் மகன் பிரபாகரன் (32) சொந்தமாக சரக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், அடையாளம் தெரியாத நபர்கள் பிரபாகரனிடம் வாடகைக்கு ஆட்டோ வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். செட்டிப்பாளையம் வடசித்தூர் சாலையில், பனப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ சென்றபோது, திடீரென பிரபாகரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்கள்.



இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நெகமம் போலீசார், மோப்ப நாய் மற்றும் தடய நிபுணர்களின் உதவியுடன் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். விசாரணையில், கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரனின் தங்கையின் கணவரான சாதிக் பாஷா (36) கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், சாதிக் பாஷா வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பிரபாகரன் தடையாக இருந்ததால், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரியவந்தது. இதற்காக தனது நண்பர் மணிகண்டன் (24) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோரின் உதவியுடன் கொலை செய்ததாக சாதிக் பாஷா வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, சாதிக் பாஷா, மணிகண்டன் மற்றும் இளஞ்சிறார் ஆகிய மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...