பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் கொலை: மூன்று பேர் கைது

பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் பிரபாகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கோவை போலீசார் விசாரணையில் இளஞ்சிறார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் பிரபாகரன் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளஞ்சிறார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜாவின் மகன் பிரபாகரன் (32) சொந்தமாக சரக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், அடையாளம் தெரியாத நபர்கள் பிரபாகரனிடம் வாடகைக்கு ஆட்டோ வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். செட்டிப்பாளையம் வடசித்தூர் சாலையில், பனப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ சென்றபோது, திடீரென பிரபாகரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்கள்.



இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நெகமம் போலீசார், மோப்ப நாய் மற்றும் தடய நிபுணர்களின் உதவியுடன் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். விசாரணையில், கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரனின் தங்கையின் கணவரான சாதிக் பாஷா (36) கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், சாதிக் பாஷா வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பிரபாகரன் தடையாக இருந்ததால், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரியவந்தது. இதற்காக தனது நண்பர் மணிகண்டன் (24) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோரின் உதவியுடன் கொலை செய்ததாக சாதிக் பாஷா வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, சாதிக் பாஷா, மணிகண்டன் மற்றும் இளஞ்சிறார் ஆகிய மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...