அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தந்தை சொத்து அல்ல; ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து - கே.சி. பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி யாரையும் கட்சியில் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு அதிமுக அவரது தந்தை சொத்து அல்ல. அதிமுக ஒன்றை கோடி தொண்டர்களின் சொத்து என்றும் ஒருங்கிணைப்பு குழு சார்பாக முதல்கட்டமாக சசிகலாவை சந்திக்க இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.


Coimbatore: கோவை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி, எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கடந்த 13 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தன் மீது அவதூறாக பேசியதன் அடிப்படையில் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுகவின் வாக்குகள் திமுகவிற்கு சென்றிருப்பதாகவும், கோவையிலும் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



"அதிமுகவை வெற்றி பெற வைக்க நினைக்கும் ஒவ்வொருவரையும் அரவணைப்பது தான் நல்லது. உடல்நிலை கருதிதான் ஜானகி அம்மா ஒதுங்கிக் கொண்டார். பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்தார். அதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். ஆனால் அது தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்," என்று கே.சி. பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கிளை செயலாளர் அளவிலேயே செயல்படுவதாகவும், யாரையும் அரவணைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார். மேலும், எடப்பாடி பேசுவது எல்லாம் அரசியல் அறியாமையில் பேசுவதாகவும் அவர் கூறினார்.

"அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் தந்தை சொத்து அல்ல. அது ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து," என்று கே.சி. பழனிச்சாமி வலியுறுத்தினார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர் என்றும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இறுதியாக, ஒருங்கிணைப்பு குழு சார்பாக முதல் கட்டமாக சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...