அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தந்தை சொத்து அல்ல; ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து - கே.சி. பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி யாரையும் கட்சியில் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு அதிமுக அவரது தந்தை சொத்து அல்ல. அதிமுக ஒன்றை கோடி தொண்டர்களின் சொத்து என்றும் ஒருங்கிணைப்பு குழு சார்பாக முதல்கட்டமாக சசிகலாவை சந்திக்க இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.


Coimbatore: கோவை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி, எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கடந்த 13 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தன் மீது அவதூறாக பேசியதன் அடிப்படையில் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுகவின் வாக்குகள் திமுகவிற்கு சென்றிருப்பதாகவும், கோவையிலும் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



"அதிமுகவை வெற்றி பெற வைக்க நினைக்கும் ஒவ்வொருவரையும் அரவணைப்பது தான் நல்லது. உடல்நிலை கருதிதான் ஜானகி அம்மா ஒதுங்கிக் கொண்டார். பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்தார். அதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். ஆனால் அது தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்," என்று கே.சி. பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கிளை செயலாளர் அளவிலேயே செயல்படுவதாகவும், யாரையும் அரவணைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார். மேலும், எடப்பாடி பேசுவது எல்லாம் அரசியல் அறியாமையில் பேசுவதாகவும் அவர் கூறினார்.

"அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் தந்தை சொத்து அல்ல. அது ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து," என்று கே.சி. பழனிச்சாமி வலியுறுத்தினார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர் என்றும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இறுதியாக, ஒருங்கிணைப்பு குழு சார்பாக முதல் கட்டமாக சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...