கோவை அரசு கலைக் கல்லூரியில் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பறைகள் திறப்பு

கோவை அரசு கலைக் கல்லூரியில் கிரிஷா அறக்கட்டளையின் CSR நிதியுதவியுடன் மாணவிகளுக்காக ரூ.33.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


Coimbatore: கோவை அரசு கலைக் கல்லூரியில் தனியார் நிறுவனமான எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட்டின் கிரிஷா அறக்கட்டளை சார்பில், சமூக பொறுப்பு நிதி (CSR) மூலம் மாணவிகளுக்காக ரூ.33.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகள் ஜூலை 5 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். அவர் தனது உரையில், மாணவிகளின் நலனுக்காக இத்தகைய உதவிகளை வழங்கும் தனியார் நிறுவனங்களின் முயற்சிகளை பாராட்டினார்.



எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி நிறுவனத்தின் தலைவரும், கிரிஷா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான சீனிவாசன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்படும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், மாணவ மாணவியர் கல்வி கற்று எதிர்காலத்தில் சமூக பணியாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் எழிலி, எமரால்டு நிறுவனத்தின் அலுவலர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் பல மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். புதிய கழிப்பறை வசதிகள் மாணவிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...