கோவை அரசு கலைக் கல்லூரியில் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பறைகள் திறப்பு

கோவை அரசு கலைக் கல்லூரியில் கிரிஷா அறக்கட்டளையின் CSR நிதியுதவியுடன் மாணவிகளுக்காக ரூ.33.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


Coimbatore: கோவை அரசு கலைக் கல்லூரியில் தனியார் நிறுவனமான எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட்டின் கிரிஷா அறக்கட்டளை சார்பில், சமூக பொறுப்பு நிதி (CSR) மூலம் மாணவிகளுக்காக ரூ.33.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகள் ஜூலை 5 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். அவர் தனது உரையில், மாணவிகளின் நலனுக்காக இத்தகைய உதவிகளை வழங்கும் தனியார் நிறுவனங்களின் முயற்சிகளை பாராட்டினார்.



எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி நிறுவனத்தின் தலைவரும், கிரிஷா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான சீனிவாசன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்படும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், மாணவ மாணவியர் கல்வி கற்று எதிர்காலத்தில் சமூக பணியாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் எழிலி, எமரால்டு நிறுவனத்தின் அலுவலர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் பல மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். புதிய கழிப்பறை வசதிகள் மாணவிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...